Translate

வியாழன், 5 ஜனவரி, 2017

மாந்த்ரீக மர்மங்கள் நேரடி பயிற்சி வகுப்பு

                                மாந்த்ரீக மர்மங்கள் நேரடி பயிற்சி வகுப்பு 

                   உலக நாடுகள் முழுவதிலும்  உள்ள நமது வாசகர்கள் பலர் எங்களை தொடர்பு கொண்டு ஜோதிட, மாந்த்ரீக பயிற்சி நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் நடத்தப்படுமா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இறைவனின் கட்டளை அதுவாக இருந்தால் நிச்சயம் பயிற்சி வகுப்புகள் நமது பீடத்தில், நமது ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் மூலியமாக நடத்தப்படும் என்று சொல்லி வந்தேன். தற்போது இறைவனின் உத்தரவும், எனது குருநாதரின் உத்தரவும் பயிற்சி வகுப்புகள் நடத்தும்படி கிடைத்தால் நமது பீடத்தில் பயிற்ச்சி வகுப்புகள் நடத்த இருக்கிறோம்.
                     
                 பல தலைமுறைகளாய் பாதுகாத்து வரப்பட்ட சித்தர்களின் அறிய ஓலைசுவடிகளில் உள்ள முறைகள் - எனக்கு எனது குருநாதர் உபதேசித்து - நான் கையாண்டு வெற்றிபெற்ற முறைகள், உலகில் பல மந்த்ரீகர்களும் செய்ய இயலாத காரியங்களை - நான் செய்து சாதனை படைத்த எளிய அறிய முறைகள் - பல ஆண்டு பாடுபட்டு நான் கற்றுக்கொண்ட முறைகள் - எவ்வித ஒளிவு - மறைவு இல்லாமல், நான் கற்ற குரு - சிஷ்ய முறையில் மாந்த்ரீக மர்மங்கள் நேரடி  பயிற்சி வகுப்பு உங்களுக்காக நடத்தப்படுகிறது. 

பயிற்சி காலம் :
                                  ஆறு மாதம்  நேரடி பயிற்சியும் பின் தீட்சையும் வழங்கப்படும். பிற மாந்த்ரீக பயிற்சி மையங்கள் இரண்டு மணி நேரத்தில் பயிற்சியும் தந்து தீட்சையும் தருகின்றனர். இது சாத்தியமாகுமா? எவ்வாறு சாத்தியமாகும், ஒரு சிஷ்யனுக்கு எந்த தெய்வ தீட்சை தரவேண்டும் என ஒரு குரு அறிந்து கொள்ளவே குறைந்த பட்சம் மூன்று நாட்கள் ஆகும். அவ்வாறு இருக்க எல்லா பயிற்சியும் அளித்து தீட்சை அளிக்க இரண்டு மணி நேரம் போதுமா? நமது சர்வ சக்தி விருட்ச பீடம் - ஆறு மாதங்கள்  நேரடி வகுப்பாக மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் ஏற்பாடுகளை செய்துள்ளோம். 
பயிற்சி விபரம் :
                                   எளிய முறையில் ஜோதிடம் பார்க்க ஜோதிட பயிற்சிஎண்கணித பயிற்சி, அதிர்ஷ்ட பெயர்களை அமைக்கும் முறை, அதிஷ்ட கற்கள் தேர்வு செய்யும் முறை, எளிய முறை ரோம ரிஷி பஞ்சபட்சி சாஸ்திரம், அஷ்ட கர்மங்கள் 1. வசியம் - இது மற்றவர்களை தன் வசப்படுத்துவது ( ராஜ வசியம், புருஷ வசியம், ஸ்திரி வசியம், தேவ வசியம், ஜன வசியம், தொழில் வசியம்,மிருக வசியம், சத்ரு வசியம், லோக வசியம் ), 2.ஸ்தம்பனம் - இது எந்த ஒரு இயக்கத்தையும் ஸ்தம்பிக்க செய்வது, 3.மோகனம் - இது பிறரை தன்மீது மோகிக்க செய்வது, 4.வித்வேஷனம் - இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது , 5.உச்சாடனம் - இது தீய சக்திகள் அனைத்தையும் இடத்தை விட்டு விரட்டுவதாகும்  ,6.அகர்ஷனம் - இது துர்தேவதைகளை தன்முன் பணிய வைப்பது, 7.பேதனம் - இது சுயநினைவற்று பேதலிக்க செய்வது, 8.மாரணம் - ஒருவரை உயிருக்கு கேடு விளைவிப்பது )  இவைகளுக்குண்டான எந்திர மந்திர மூலிகை பிரயோக முறைகள், எளிய முறை மைகள், அஞ்சனம் தயாரிக்க பயிற்சி ஏவல் - பில்லி - சூனியங்கள் நீக்கும் முறை, துர்தேவதைகள் முதல் பிரம்மராட்சசம் வரை அடக்கி கட்டும்  முறை, உடல்கட்டு கட்ட - அவிழ்க்க முறை, தியான பயிற்சி, யட்சனி வசிய முறை, அனைத்து காரியங்களுக்கான எந்திர - மந்திர முறை, உங்கள் வாழ்விலும் உங்களை நாடி வருபவர்களின் வாழ்விலும் வெற்றிகளை குவிக்க செய்யும் இரகசிய சஞ்சீவி மூலிகை பிரயோக வித்தை முறைகள் கற்று தரப்படும்.

பின்குறிப்பு :

                         இந்த பயிற்ச்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக சர்வ சக்தி விருட்ச பீடத்திலேயே வழங்கப்படும். கட்டணம் ஏதும் கிடையாது. தீட்ஷை பெறும்போது மாணவர்கள் விரும்பிய காணிக்கையை கொடுத்து தீட்ஷை பெற்றுக்கொள்ளலாம்.




முன்பதிவு செய்ய :
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.
                                        E - mail : ssvbeedam@gmail.com.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட 


        "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள்சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும். 


                                                  
                      ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்  பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :
                                            ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும்.  இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :
                       ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை  செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5.சுண்ணாம்பு :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :
                                                          ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை  சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.

           மேலே கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை பற்றி விரிவாக பார்த்தோம். கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளின் பாதிப்புகள் நீங்கி நம் இல்லங்களில் அமைதியும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், லட்சுமிகடாச்சமும், அதிஷ்டமும் உண்டாக உபயோகிப்பீர் ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி''



         ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' நமது ''சர்வ சக்தி விருட்ச பீடம்'' - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத  படைப்பாகும். அரியவகை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. அற்புத பலன் தருவது. உலகம் முழுவதும் விநியோகம் செய்ய வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் வாரியாக ஏஜெண்டுகள்  தேவை. விநியோகம் செய்ய அணுகவும்  ''சர்வ சக்தி விருட்ச பீடம்'' தொடர்புக்கு செல் : 85260 74891, 99440 99980.
      


வெள்ளி, 29 ஜூலை, 2016

பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

                     4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியின் தோற்றம் 
                                       

 பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 
                                        ஆதி  யுகம் 

 4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பிராணவாயு இல்லாத வளிமண்டலம். 
3,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியில் பெருங்கடல்கள் தோன்றுதல்.
3,400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - உயிரின் தோற்றம்.
2,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆற்றலை உருவாக்கும் உயிரின் தோற்றம்.
2,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வளிமண்டலத்தில் பிராணவாயு கிடைத்தல் .
1,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலின இனப்பெருக்கம், இதே காலகட்டத்தில் ஓசோன் படலமும் தோன்றியது.

...........................................................ஆதியுகத்தின் முடிவு...........................................................

 பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

                                      முதல்  யுகம்

700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பல செல்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றம்.
500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையற்ற மீன்களின் தோற்றம்.


440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - கட்டைத் தன்மை கொண்ட ஒளிசேர்க்கை செய்யும் தாவரங்களின் தோற்றம்.

425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையுள்ள மீன்களின் தோற்றம்.
355 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நீரோடு நிலத்திலும் வாழும் உயிரினங்களின் தோற்றம்.

350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - விதையுடன் கூடிய பெரணித்  தாவரங்களின் தோற்றம்.
320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஊர்ந்துசெல்லும் விலங்குகள் மற்றும் இறக்கையுடன் கூடிய பூச்சிகளின்  தோற்றம்.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டும் தன்மைக்கொண்ட ஊர்வனவற்றின் தோற்றம்.

......................உயிரினங்களின் பேரழிவு - முதல் யுகத்தின் முடிவு.......................




 பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி
                               இரண்டாவது  யுகம்


220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தேவதாரு, மதனகாம மரங்களின் தோற்றம், இதே காலகட்டத்தில்தான் டைனோசர்களும் தோன்றி ஆதிக்கம் செலுத்தின.

144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டிகளின்  தோற்றம்.

134 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பறவைகளின் தோற்றம்.


115 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நஞ்சு கொடியுள்ள பாலூட்டிகளின்  தோற்றம்.

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனை குடும்பத் தாவரங்களின்  தோற்றம்.

இரண்டாவது யுகத்தின் போது தான் பூமியின் நிலப்பகுதிகள் உடைந்து வெவ்வேறு திசையில் நகர்ந்து பல கண்டங்களாக பிரியத் தொடங்கின.

...................உயிரினங்களின் பேரழிவு - இரண்டாவது யுகத்தின் முடிவு.......................






 பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி
                               மூன்றாவது  யுகம்

56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குரங்குகளின் முன்னோர்களின்  தோற்றம்.

55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - புற்களின்  தோற்றம்.


52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குதிரைகள், காண்டாமிருகங்கள் தோற்றம்.


35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வாலற்ற குரங்குகளின்  தோற்றம்.


2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஆதி மனிதனின் தோற்றம்.



மூன்றாவது யுகம் முடியும் தருவாயில்  பூமி பல கண்டங்களாக  முழுமையாக பிரிந்துவிட்டது.

...................உயிரினங்களின் பேரழிவு - மூன்றாவது  யுகத்தின் முடிவு.......................





 பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி
                               நான்காவது  யுகம்

0.018 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனிக்கட்டிகள் உடைந்து, உருகி பூமியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


0.03 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நவீன கால மனிதனின் முன்னோர்கள் பூமியில் தோன்றினர்

மேற்கண்ட நான்கு யுகங்களில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் ஆதி மனிதன் பூமியில் அவதரித்ததில் இருந்து இன்றுவரை வெறும் 20 இலட்சம் வருடங்களே ஆகிறது. ஆனால் நமது பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. பூமி உயிரினங்களை வழி நடத்திய காலமெல்லாம் மாறி, இன்று மனிதன் பூமியை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டான். பூமியின் வளங்களை அழியாமல் காத்து, பூமியின் இயற்கை வளங்களை அளவோடு அனுபவித்து வந்தால் இன்னும் 100 கோடி ஆண்டுகள் நம் சந்ததிகள் இந்த பூமியில் செழித்து வாழும்...
 .









புதன், 29 ஏப்ரல், 2015

விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

                             விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை 


                     நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.



நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :

1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,
2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)
3. ஐந்து திரிகள்,
4. பல வண்ண உதிரி மலர்கள்,
5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,
6. தூபமிட சாம்பிராணி,
7. வெண்பொங்கல்,
8. சர்க்கரை பொங்கல்,
9. மனைப்பலகை ஒன்று,
ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.


             வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும். 

1. சூரியன் :
                     "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

2. சந்திரன் :
                                           "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  பொளமாய  நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன்  :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  புதாய   நமஹ" - 21 முறை சொல்லவும்.



5. குரு  :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  குருவே    நமஹ" - 21 முறை சொல்லவும்.


6. சுக்கிரன்  :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சுக்ராய   நமஹ" - 21 முறை சொல்லவும்.


7. சனி  :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ  சனியே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
                                                                       "ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே   நமஹ" - 21 முறை சொல்லவும்.


                                  பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.  





வியாழன், 16 ஏப்ரல், 2015

விதியை வெல்லும் தாந்த்ரீக முறை

                                           விதியை வெல்லும் தாந்த்ரீக முறை


                          நமது முன்னோர்கள் நாம் வளமுடனும் நலமுடனும் சர்வ சித்திகளையும் பெற்று வாழ அரிய பல கலைகளை அருளிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மந்திர சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக விளங்குவது தாந்த்ரீக கலையாகும். மாந்த்ரீக கலையில் மந்திரங்களை ஆயிரம், இலட்சம், கோடி என்ற எண்ணிக்கைகளில் உருவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் சித்தியடையும், ஆனால் தாந்த்ரீகம் என்பது மிகவும் எளிமையானது, ஒரு சில நாட்களிலேயே பலன் தரக்கூடியது, பொருள் செலவும் மிகவும் குறைவு, பூஜை செய்யும் நேரமும் மிகவும் குறைவு அதாவது பூஜை நேரம் நிமிடங்களில் அடங்கும். சிவன் - பார்வதியிடம் இருந்து ஞான பழத்தினை அடைவதற்காக முருகப்பெருமான் உலகையே வலம் வந்தார், ஆனால் விநாயக பெருமானோ தாய் - தந்தையே வலம் வந்து ஞான பழத்தினை எளிமையாக பெற்றார். இந்த புராணத்தை உற்று பார்த்தோமானால் முருகபெருமான் உலகையே வலம் வந்த செய்கையை போல கடினமானது மாந்த்ரீகம். ஆனால் தாய் - தந்தையையே வலம் வந்து விரைவாக எளிமையாக ஞான பழத்தினை பெற்றது போல எளிமையானது தந்த்ரீகம். இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக நம் வாழ்வில் தோன்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வினை காணலாம். இந்த தாந்த்ரீக முறைகளை தகுந்த தாந்த்ரீக குருவிடம் கேட்டறிந்து, தாந்த்ரீக குருவின் ஆசியும் பெற்று, நம் காரியங்களுக்கு உண்டான தாந்த்ரீக முறைகளை செய்து உடனடி பலன் பெறலாம், இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக எந்தெந்த காரியங்களை நாம் சாதித்து கொள்ள இயலும் என்ற பட்டியலை இங்கே விரிவாக காணலாம்.

1. செல்வவளம் பெருகி நிலைக்க,
2. எண்ணியதெல்லாம் கிடைக்க,
3. தேகசக்தி - ஆயுள் விருத்தி பெற,
4. விதியையும் சாதகமாக்க நவகிரக பூஜை,
5. சர்வ தெய்வ, தேவதை, யட்சணி வசியம்,
6. செல்வந்தராக்கும் மகாலட்சுமி உபாசனை,
7. வீடு வாகன யோகம் பெற,
8. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற,
9. செல்வம் தரும் அதிர்ஷ்ட்ட மணிபர்ஸ்,
10. ஆண் - பெண் தகாத உறவுகளை துண்டிக்க,
11. விபத்து கண்திருஷ்ட்டியில் இருந்து பாதுகாப்பு பெற,
12. அதிர்ஷ்டம் பெருக,
13. சர்வ லோக வசியம்,
14. சர்வ லோக வசிய விபூதி,
15. காரிய சித்தி பெற விபூதி,
16. முகராசி பெற,
17. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க,
18. செய்தொழிலில் பணம் கொழிக்க தனவசிய பிரயோகம்,
19. சகல காரிய சித்திக்கும் சர்வ வசிய விபூதி,
20. செல்வ செழிப்புக்கு மணிப்ளாண்ட் முறை,
21. கண்திருஷ்டி, தீயசக்திகளை விரட்ட,
22. எதிரிகளை நம் வழிக்கே வராமல் விரட,
23. பகையான உறவை நட்பாக மாற்ற,
24. கொடிய எதிரிகளை அழிக்க,
25. கொடிய நோய்களில் இருந்து விடுபட,
26. தீய எதிரிகளை குடுவைக்குள் அடைக்க,
27. ஏவல், பில்லி, சூனியம், செய்வினைகளை வைத்தவர்களுக்கே திருப்பிவிட,
28. சத்ருவை தாந்த்ரீகத்தால் கட்ட,
29. பூத, பிரேத, ஏவல்களை விரட்ட, 
30. அடகு நகையை மீட்க, 
31. கல்வி, கேள்விகளில் அறியாததை உணர,
32. ராகு - கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்தில் இருந்து விடுபட,
33. புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் அடைய,
34. ஆண் - பெண் வசிய பெ,
35. கல்வியில், போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய,
36. திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெற,
37. நினைத்தது நிறைவேற,
38. வாரக்கடனும் வர,
39. கணவன் - மனைவி வசியம்  பெற்று வாழ,
40. நினைத்த வசதிகளை அடைய,
41. அதிர்ஷ்ட தேவதை வசிய தைலம்,
42. எண்ணியது கிடைக்க,
43. விரும்பிய ஆண் - பெண் வாரிசு பெற,
44. விவசாயத்தில் விளைச்சல் பெருக,
45. வழக்குகள் நமக்கே வெற்றியாக,
46. அரசியலில் வெற்றி அடைய,
47. அரசியலில் உயர்பதவி பெற,
48. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர,
49. வசிய இடுமருந்தை முறிக்க,
50. போதை அடிமைகளை முற்றிலும் திருத்த,
51. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல,
52. கடன் தொல்லையில் இருந்து விடுபட,
               

             போன்ற நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக முறையில் எளிய தீர்வினை அடைய நமது சர்வ சக்தி விருட்ச பீட குருஜி ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.

முகவரி :
                   ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகள்,
                   சர்வ சக்தி விருட்ச பீடம்,
                   26/6, கிச்சகதியூர்,
                  இலுப்பாபாளையம் (அஞ்சல்),
                  சிறுமுகை - 641302,
                  கோயம்புத்தூர் (மாவட்டம்).
                  செல் : 85260 74891, 99440 99980.

சனி, 21 மார்ச், 2015

செல்வவளம் பெருகி நிலைக்க

                                                 செல்வவளம் பெருகி நிலைக்க 


                                    இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு  "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். 
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.             

திங்கள், 16 மார்ச், 2015

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்



       ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் எந்த இராசியில் அமைகிறது என்பதை பொறுத்து அந்த மனிதனின் குண நலன்களும், புத்தி சாதுர்யமும், உடல் அமைப்பும், செயல் ஆற்றும் திறனும், மற்றும் அந்த மனிதனின் விதி அமைப்பும் அதனால் வாழ்வில் அவன் அடையும் இன்ப துன்பங்களும் கணக்கிடப்படுகின்றன.

         இன்று பலரும் வாழ்வில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, அந்த துன்பத்தை தாங்க முடியாமல் பல தெய்வீக திருத்தலங்கள் சென்று வழிபடுவதும், பரிகாரங்கள் செய்து கொள்வதும் நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வாகும். அப்படி வழிபாடும் பரிகாரங்களும் செய்தும் பலனின்றி புலம்பி தவிப்பவர்கள் ஏராளம். இந்த நிலை மாறவே ஒரு எளிய பரிகார முறையை இங்கே தெளிவுபடுத்த இருக்கிறேன்.

           மனித சமுதாயம் இன்புற்று வாழ்வதற்காகவே தம்மையும் தம்வாழ்வையும் அற்பணித்து கொண்டவர்கள் சித்தர்கள். தெய்வங்களுக்கு அடுத்தபடியாக நாம் போற்றித் தொழுவது சித்தர்களையே ஏனென்றால் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிநிலையை முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். அதன்படி பார்த்தோம் என்றால் முதலில் நம்மை பெற்றெடுத்து பூமியில் அறிமுகபடுத்தியது தாய், இரண்டாவதாக நம்மை காத்து உலக அறிவையும், நல்ல கல்வியையும் பெற செய்வது தந்தை, முன்றாவதாக நல்ல கல்வியையும், அறிவையும், ஞானத்தையும், மோட்சத்தையும் நாம் அடைய வழிகாட்டுவது குரு (ஆசிரியர்கள், குருமார்கள்,சித்தர்கள்,ஞானிகள்,யோகிகள்) இவர்களின் வழிகாட்டுதலின் படியே, இவர்களின் ஆசி அனுகிரகம் பெற்றே நாம் நான்காம் நிலையில் உள்ள தெய்வத்தை அடைய முடியும்.

          எனவே பல வழிபாடுகள் செய்து, பல பரிகாரங்கள் செய்து தெய்வத்தின் அனுகிரகத்தினை பெறுவது சற்று கடினமான காரியமே, ஆனால் நமக்காகவே வாழ்ந்து நமக்காகவே இன்றும் அரூபமாய் சூட்சுமமாய் வாழ்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பவர்கள் சித்தர்களே இவர்களின் அருளை பெறுவது மிகவும் எளிமையானது. உங்கள் நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர்களின் மூல மந்திரத்தினை ஜெபம் செய்து வருவதும், அந்த சித்தர்கள் ஜீவசமாதி ஆன தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதும் நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கி, நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும்  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கீழே உங்களின் நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த மந்திரங்களை ஜெபம் செய்து பலன் அடைவீர்களாக.

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி :
                       ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி :
                       ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி :
                        ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி :
                         ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி :
                          ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி :
                          ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி :
                           ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                           ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                            ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் - மிதுன இராசி :
                            ஸ்ரீம் குரு - துரு - குரு - வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - மிதுன இராசி :
                            ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் - கடக இராசி :
                             ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம்  - நட்சத்திரம் கடக இராசி :
                             ஓம் ஸ்ரீம் - குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் -  கடக இராசி :
                              ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                              ஓம் ஹம் - ஸம் - ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                              ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி :
                               ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - ஸ்ரீ இராம தேவரே நம :

18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி  இராசி :
                                ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி  இராசி :
                                 ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி  இராசி :
                                 ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம்  நட்சத்திரம்  - கன்னி  இராசி :
                                 ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை  நட்சத்திரம் 1,2ம் பாதம்  - கன்னி  இராசி :
                                 ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை  நட்சத்திரம் 3,4ம் பாதம்  - துலாம்  இராசி :
                                 ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி  நட்சத்திரம்  - துலாம்  இராசி :
                                  ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம்  நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - துலாம்  இராசி :
                                     ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம்  நட்சத்திரம் 4ம் பாதம்  - விருச்சிக  இராசி :
                                    ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம்  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி :
                                    ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி :
                                    ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி :
                                    ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் - குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. உத்திராடம்  நட்சத்திரம்  1ம் பாதம் - தனுசு  இராசி :
                                     ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

31. உத்திராடம்  நட்சத்திரம்  2,3,4ம் பாதம் - மகர  இராசி :
                                      ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. திருவோணம்  நட்சத்திரம்  - மகர  இராசி :
                                      ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. அவிட்டம்  நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர  இராசி :
                                       ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. அவிட்டம்  நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப  இராசி :
                                        ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

34. சதயம் நட்சத்திரம் - கும்ப  இராசி :
                                        ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

35. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - கும்ப  இராசி :
                                          ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

36. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்  - மீன  இராசி :
                                           ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

37. உத்திரட்டாதி நட்சத்திரம்  - மீன  இராசி :
                                           ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

38. ரேவதி நட்சத்திரம்  - மீன  இராசி :
                                            ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :








ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம்

          கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம் 
     

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது


     இந்த மரகத கல்லை லிங்கமாகசெய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
      மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.
       மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்
அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த
மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம்
நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த
விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில்
மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த

மருத்துவ சக்தி வாய்ந்தது.

             அரிய மரகத லிங்கம் ஒன்று நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் அன்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891
                        e-mail : ssvbeedam@gmail.com.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர்

         
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். இதுநாள் வரை ரூபாய் 1,30,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 25,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.



                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

               
அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள் :



இதுவரையில் நமது வலைப்பதிவை வாசித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது (சர்வ சக்தி விருட்ச பீடம், ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் - ஸ்ரீ லக்க்ஷ்மி தாச ஸ்வாமிகளின்) இதயம் கனிந்த நன்றிகள், அனைவரும் பதினாறு வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல என் அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி அருள்புரிவாளாக ! சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகைவேர் என்ற தலைப்பில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பு பற்றி கடந்த 14 அக்டோபர் 2013ல் எழுதியிருந்தேன்  அந்த கட்டுரையை இன்று வரையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து பயன்பெற்றனர், அதில் 200க்கும் மேற்பட்ட  வாசகர்கள்  ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பினை வாங்கி பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற்று வருகின்றனர், ஏன் அனைவரும் இதனை வாங்கி கொள்ள இயலவில்லை என்றால் இது அபூர்வமாய் கிடைக்கும் சஞ்சீவி மூலிகை இதன் விலையும் அதிகம், ஆகையால் பல நூறு வாசகர்கள் என்னை தொடர்பு கொண்டு நாங்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் கொஞ்சம் விலை குறைவாக தந்தால் அனைவரும் பயனடைவோம் என்று கேட்டு வந்தனர், இந்த பிரார்த்தனையை நான் அன்னையிடம் முறையிட்டு வேண்டி வந்தேன், அதன் பலனாக எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியை போல் அபூர்வ சக்திகளை அளிக்கும் நான்கு வேர்களை கூட்டி காப்பு செய்து கொடு என்று உத்தரவு தந்தாள், அதனையே இக்கட்டுரையில் "அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்" என்ற தலைப்பில் அதன் மகத்துவத்தை வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன், இந்த காப்பின் விலையும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியில் நான்கில் ஒரு பங்குதான் எனவே வாசகர்கள் அனைவரும் பயன்பெறலாம்.

சங்கு நாராயண சஞ்ஜீவி 

                   இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
     

சிவப்பு நத்தைசூரி :
"எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.

மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை.


கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை 

    இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும்  அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகை காப்பு :


                மேலே நாம் படித்து அறிந்த சங்கு நாராயண சஞ்ஜீவி, சிவப்பு நத்தைசூரி, மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை, கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை ஆகிய நான்கு மூலிகைகளையும் அதற்க்கு உரிய மந்திரங்களை உருவேற்றி ஒரு காப்பில் அடைத்து நமது வலது கையில் அணிந்து கொண்டால் மேலே நாம் கண்ட அனைத்து நட்பலன்களையும் அடைந்து பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.இதுநாள் வரை ரூபாய் 60,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 15,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு  மட்டும் பொருந்தும்.



தொடர்புக்கு :
 
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891